Tuesday, July 28, 2020

புகழோங்கிய பாரதம்

பாரதம் என்ற பெயர் பெற்ற இந்த நாடு அரசியல் காரணங்களுக்காக இந்தியா என்று அழைக்கப் படுகிறது.
.
ஆனால் பாகிஸ்தானிலும், வங்காளதேசத்திலும் மற்றும் சில நாடுகளிலும் நம் தேசம் ஹிந்துஸ்தான் என்று அடையாளப் படுத்தப்படுகிறது .
.
குறிப்பாக பாரதமாக இருந்த நாட்டில் இருந்து பிரிக்க பட்டபோது ஆங்கிலேயன் இந்த பாரதம் என்ற பெயர் அழிந்து போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருந்தான்.
.
அ-கண்ட  பாரதம் ஏற்கனவே பல்வேறு காரணங்களால் சுருங்கி இருந்தது அது மேலும் சிதிலம் அடைய வேண்டும் என்று நினைத்தான் ஆங்கிலேயன் .
.
அந்த பிரிவினையில் ஹிந்து ஸ்தான் , பாக் ஸ்தான்  என்று இரு ஸ்தானங்கள் உருவாக்கப்பட்டது.
.
கொடிய நாகத்தின் விஷத்தை கொண்டு இருந்த ஆங்கிலேயன் கூடவே ஒரு சதி செய்தான் நாட்டில் இருக்கும் சமஸ்தானங்கள் யார் வேண்டுமானாலும் இந்த இரண்டில் யாரோடு வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்ற விஷ விதையை தூவினான்.

 கிருஷணர் கூறினார்

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம் |
பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே ||
– என கீதையில் மொழிகிறான் கண்ணன்.
பகவான் கிருஷ்ணர்
எப்பொழுதெல்லாம் தர்மம் குலைகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டுவதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், சாதுக்களை காப்பதற்கும் நான் யுகம் யுகமாக அவதரிக்கிறேன் என்பது இதன் பொருள்.

கூடவே தெய்வம் மனுஷ்ய ரூபேனா .. அதாவது கடவுள் ஏதாவது ஒரு மனித ரூபத்தில் வருவார். என்பதும் இன்றளவும் வழக்கில் இருந்து வருகிறது.

இத்தருணத்தில் இறைவன் இரும்பு மனிதர் வல்லபபாய் படேல் உருவத்தில் வந்தார்.

யோசித்து பாருங்கள் அன்பர்களே !  ஹைதராபாத்தும் , ஜுனாகத் ம், காஷ்மீரமும்  இன்னும் சில சமஸ்தானங்களும் பாகிஸ்தானோடு சேர்ந்து .. இவைகள் போக மீதி மட்டும்  நம் பாரத நாடு இருந்து இருந்தால் .. இன்று இந்த உலகிற்கே வழி காட்டியாக உள்ள நாடு இருந்து இருக்குமா? ஆம் துண்டு துண்டாக சிதறி இருக்கும்.
.

ஆனால் இறைவன் சித்தம் எவ்வாறாக இருந்தது



அறிவோம் அடுத்த பதிவில் ..

No comments:

Post a Comment