Wednesday, July 29, 2020

புகழோங்கிய பாரதம் ....2

ஆம் இறைவன் சித்தம் எவ்வாறாக இருந்தது ?
.
இரும்பு மனிதர் ..சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் முயற்சியால் ஆங்கிலேய மற்றும் பிரிவினை வாத சக்திகளின் முயற்சி முறியடிக்கப் பட்டது.
.
பாகிஸ்தான் , இந்தியா என்ற இரு நாடாக மட்டும் பிரிந்தது.
.
சற்றே துண்டு துண்டு நாடாக ........
 யோசித்தாலும் மனது பதைபதைக்கிறது .
.
தமிழகத்திலே கூட உடனடி பிரிவினை வாதம் தலை தூக்கியது. ஆம் பெரியார் தலைமையில் நீதி கட்சி  ஆங்கிலேயருக்கு கொடி பிடிக்க துவங்கினர்  . சுதந்திரம் தேவை இல்லை என்று பிரகடனப் படுத்தினர்.
.
பிரிவினை வாதம் என்பது .. ஒரு தொற்று ஒரு இடத்தில் அது தொற்றினால் தேசம் முழுவதும் பரவும்.

படேல் போன்ற உறுதி மிக்க தலைவர்கள் இருந்ததால்  வேற்றுமையில்  ஒற்றுமை என்பது பாரத தேசத்தின் ஆன்மா சம்பந்த பட்டது. 
இங்கு யாருமே யாருக்கும் எதிரி இல்லை.
அவரவர் கோட்பாடில் வாழ்வோம் அனால் இணைந்து வாழ்வோம். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவுவோராக வாழ்வோம்.
.
இது ஒன்றும் நம் தேசத்திற்கு புதிதல்ல.. இது தேசத்தின் மாண்பு. என்ற உணர்வு தேசம் முழுவதும் பரவியது. பாரதம் கம்பீரமாக தன் புதிய வடிவில் நின்றாள்.


ஆனாலும் நேரு போன்றோரின் தேசம் சார்ந்த சிந்தனையில் ஏற்பட்ட சிதறலால் நம் தேசத்தோடு ஒரு நிரந்தர பிரச்சினை ..உடலில் வந்த புண்ணாக இருந்தது.

ஆம் அதுதான் பாரதத்தின் கிரீடமாக அமைந்த காஷ்மீரத்து பிரச்சினை........தொடர்வோம்.....

No comments:

Post a Comment