Thursday, July 30, 2020

புகழோங்கிய பாரதம் ......3

ஹிந்து மன்னரால் ஆளப்பட்ட  முஸ்லிம்கள் அதிகம் இருந்த காஷ்மீரம், முஸ்லிம் மன்னரால் ஆளப்பட்ட ஹிந்துக்கள் அதிகம் வசித்த ஜுனாகட், ஹைதராபாத்   போன்றவைதான் இந்தியாவோடு இணைய யோசித்தவர்கள். 
.
ஜுனாகட், ஹைதராபாத்  இரண்டும் இரும்பு மனிதர் பொறுப்பிலும், காஷ்மீர்  நேரு அவர்கள் பொறுப்பிலும் ..இந்தியாவோடு இணைக்க முன்னேற்பாடுகள் நடந்தன. 
.
ஜுனாகட் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்க வில்லை. 
.
ஹைதராபாத் ... சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் படை பலத்தை காட்டி மிரட்டி அடி பணிய வைத்தது வரலாறு. 

ஆனால் காஷ்மீர் என்பதன் மீது அன்றில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் க்கு ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கிறது. 
.
பல பெரும் தலைவர்கள் முயற்சியாலும் ,குருஜி  கோல்வால்கர் அவர்கள் முயற்சியாலும் காஷ்மீர் மன்னர் மகாராஜா ஹரிசிங் காஷ்மீரத்தை பாரதத்துடன் இணைக்க ஒப்பு கொண்டார்.

பல நிபந்தனைகளுடனே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க பட்டது. அன்று முதலே இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் காஷ்மீர் நமக்கு பிரச்சனைக்கு உரியதாகவே இருந்தது. 

என்ன கேவலம் என்றால் இந்தியாவின் பகுதியை பிடிக்க அண்டை நாடான பாகிஸ்தான் தொடர்ந்து இன்று வரை போராடுகிறது. 
.
அது பெரிய விஷயமல்ல .. ஆனால் தேசத்தின் உள்ளேயே இந்த அண்டை தேசத்திற்கு ஆதரவாக உள்ள புல்லுருவிகள் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். 

விடுதலை பெற்ற அடுத்த வருடமே நம்முடன் போர் புரிய தயாரான கேவலமான நாடு பாகிஸ்தான். 

சேதமில்லா ஹிந்துஸ்தானம் என்ற பரந்த மனப்பான்மையுடைய நாம் எங்கே...மக்கள் செத்தாலும் பரவா இல்லை  தேசத்தின் எல்லைகளை விரிவாக்கம் செய்வோம் என்று பிடிவாதம் பிடிக்கும் பாகிஸ்தான் எங்கே
.
அன்றைய ஆட்சியாளர்கள் செய்த தவறால் 1948 ல் நடந்த போரில் நாம் வெற்றி பெற்றாலும் காஷ்மீரத்தின் ஒரு பகுதியை அந்நியர்கள் ஆக்கிரமிக்க விட்டு விட்டோம் அது இன்று வரை நம்மை துரத்துகிறது .
.
 எத்தனை எத்தனை பாரத அன்னையின் புதல்வர்கள் இன்று வரை இந்த பிரச்சினையால் , பாகிஸ்தானின் தீவிரவாத தூண்டுதலால் செத்து மடிகிறார்கள். இதற்கு தீர்வே இல்லையா என்று ஏங்கி கொண்டு இருந்த மக்களுக்கு கடந்த வருடம் 2019 ஆகஸ்ட் 5.. காதில் தேனாய் வந்திறங்கியது இரு செய்தி. சட்டம் 370  நீக்கம், மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதி , ஜம்மு, காஷ்மீர், லடாக் என்று 3 ஆக பிரிக்க படுகிறது என்பதுதான் அந்த செய்தி.
.
இது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைய உள்ளது விரைவில் பாரதத்தின் எல்லை சீரமைக்கப்படும்.  வரும் ஆகஸ்ட் 5 நாம் புதிய மாநிலங்கள் பிறந்த ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம். பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்துடன் 

No comments:

Post a Comment